Wednesday, April 18, 2007

ஆணி பிடுங்கப் போனேன்..! ஒரு ஆப்பு வாங்கி வந்தேன்! (1)

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் வாசலில் இருந்து பார்க்கும்பொழுதே ஏக தடபுடலாக இருந்தது. அங்கங்கே ஆட்கள் துரிதமாக பேனர் கட்டுதல், கட் அவுட் வைத்தல், மேடை அமைத்தல், ஜண்டா கட்டுதல் பொன்ற பணிகளில் மும்முரமாக இருந்தனர். தலை கைப்பு அவற்றை மேற்பார்வை பார்த்த வண்ணம் தனது அப்பிரண்டிசுகளிடம் வேலை (ஆப்புவோ அல்வாவோ அல்ல) வாங்கிக் கொண்டிருந்தார்.

"தல தல ஒரு அருமையான ஆஃபர் வந்திருக்கு" என்றவாரே மூச்சிரைக்க ஓடிவருகிறார் சிபி. சப்தம் கேட்டுத் திரும்புகிறார் தலை கைப்பு.

கைப்பு : "தள, ஏன்யா இப்படி ஓடி வரே! நீ தபதபன்னு ஓடி வரதைப் பார்த்தாலே பக்கு பக்குங்குதுய்யா!"

சிபி : "அட! போங்க தலை! எப்பவும் பழசையே சொல்லிகிட்டு, ஒரு அருமையான இளிச்சவாயன் கிடைச்சிருக்கான். நல்ல ஆஃபர் நமக்கு தலை!"

(என்னை விட ஒரு இளிச்ச வாயனா? யாருய்யா அது இந்த ஊருல) என்ற மனதிற்குள் எண்ணியவாறே
சிபியிடம் திரும்ப, அங்கே தேவ் வருகிறார்.

தேவ் : "தல! இப்போ நீங்க என்ன நினைச்சீங்கன்னு சொல்லட்டுமா?"

கைப்பு : "ஆஹா! இதையெல்லாம் கண்டு பிடிச்சி சொல்ல மொத ஆளா வந்துடுங்க! ஆனா எவனெவன் எப்பெப்ப ஆப்பு வைக்கப் போறான்னு மட்டும் கண்டு புடிக்கத் தெரியாது, ஏன்யா! தேவு இந்தக் கொலை வெறி?"

தேவ் : "ஹிஹி..! அதெல்லாம் ஒண்ணுமில்ல தலை! நீங்கதானே சொன்னீங்க, எப்பவும் குறிப்பறிஞ்சி நடந்துக்கணும்னு"

கைப்பு : "ஆமா! இதெல்லாம் நேரங்கெட்ட நேரத்துலதான் குறிப்பறிஞ்சிக்குவீங்க!
அது சரி சிபி! என்னமோ நல்ல ஆஃபர் சொன்னியே! எவன் மாட்டியிருக்கான்?"

சிபி : "அதாவது தலை! வழக்கமா நாம ஆணி பிடுங்கப் போனா எவ்வளவு கிடைக்கும்?"

கைப்பு : "ஸ்டாப்! ஆஃபரைப் பத்தி சொல்லுய்யான்னா நம்ம பிஸினஸைப் பத்தி கேக்குறியே? பாயிண்டுக்கு வாய்யா!"

சிபி : "அட இருங்க தலை! நான் இன்னும் முழுசா சொல்லவே இல்லை. அதுக்குள்ள சொல்ல விடாம குறுக்க பேசிகிட்டு"

கைப்பு : "சரி! இப்ப சொல்லு! நான் ஏதும் குறுக்க பேசுல"

சிபி :"அதாவது வழக்கமா ஒரு ஆணிக்கு எவ்வளவு கிடைக்கும்? மிஞ்சிப் போனா 50 பைசாவோ இல்லாட்டு ஒரு ரூபாவோ கிடைக்குமா? இப்ப நமக்கு கிடைச்சிருக்குற பார்ட்டி ஒரு ஆணிக்கு அஞ்சு ரூவா தரேங்குறான்"

கைப்பு : "என்னது ஒரு ஆணிக்கு அஞ்சு ரூபாயா? அடி சக்கை! யாருய்யா அது அப்படிப்பட்ட பார்ட்டி? ஆளை ஒரே அமுக்கா அமுக்கி இங்கே கூட்டியாரதுதானே"

சிபி : "அதெல்லாம் விட்ருவனா தலை! சங்கத்து வாசல்லியே நிறுத்தி வெச்சிருக்கேன். இப்ப கூப்பிடுறேன் பாரு தலை"
என்று கூறி விட்டு சங்கத்து கேட்டை நோக்கி நகருகிறார்.

கைப்பு : "யோவ் தேவு? இந்த ஆளு ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே? எதுனா வில்லங்கத்தை விலை கொடுத்து இழுத்து வர்ற ஆளாச்சேய்யா நம்ம சிபி"

தேவ் : "கவலைப் படாதீங்க தலை! நம்ம தள அப்படிப்பட்ட ஆள் இல்லை. எப்பவாச்சும் கொஞ்சம் இடக்கு முடக்கா இருப்பார். அவ்வளவுதான்"

கைப்பு : "எப்பவாச்சுமா? அப்பவெல்லாம் உடம்பு ரணகளமாகுறது எனக்குத்தானய்யா! உனக்கு என்ன? சும்மா சொல்லிட்டுப் போயிடுவே. பார்ப்போம்!"

தேவ் : "அட! அப்படியெல்லாம் ஒன்னியும் ஆகாது தலை! அப்படியே ஆனாலும் நாங்க இருக்கம்ல!"

கைப்பு : "ஆஹா! இதை ஒண்ணை சொல்லி சொல்லியே என்னை ரண களமாக்கிடுறாங்களேய்யா..!"

அப்போது சிபியுடன் ஒரு ஆள் பவ்யமாக கைப்புவை நோக்கி வருகிறான்.

- தொடரும்.

Sunday, April 01, 2007

என்ன நடக்குது தமிழ் மணத்தில்?

என்ன நடக்குது தமிழ் மணத்தில்?

www.thamizmanam.com திறந்தா இப்படி ஒரு பக்கம் வருதே? யாருக்காச்சும் வெவரம் தெரியுமா?



தெரிஞ்சா சொல்லுங்கப்பூ! நாங்கள்ளாம் ஒண்ணும் அறியாத அப்பாவி ஆவிங்க!


Domain Default page

This is default page for thamizmanam.com domain.
Now this page is generated by Plesk for you.
Please upload your own index.html file.


நாங்களும் வியர்டுதான்

எங்களையும் மனுஷங்களா ச்சே ஆவிகளா மதிச்சி வியர்டு பதிவு போட அழைத்த அவந்திகா அக்கா அவர்களுக்கு நன்றி! என்னன்னு தெரியலை! எங்களுக்கு விடுக்கப் பட்ட அழைப்பு எங்களுக்கு மட்டும்தான் தெரியணும்னு நினைச்சாங்களா? இப்போ போய் பார்த்தா அந்த அழைப்பு காணோம்! இருந்தாலும் அப்பவே அட்டென்ஷன் ஆயிட்டம்ல நாங்க!

சரி எங்களோட வியர்டு குணங்களைப் பத்தி ஒவ்வொண்ணாச் சொல்றோம்!

1.திகிலூட்டுதல்

எங்களுக்கு அடுத்தவங்களை திகிலூட்டி கிலியடைய வெச்சி பார்க்குறதுல ஒரு அல்ப சந்தோஷம் இருக்கு. ஒருத்தரை பயமுறுத்தி வேர்க்க வெல வெலக்க அவங்க நிக்கும்போது பார்க்க எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா?

நாங்க உயிரோட இருக்கும்போதே டிராகுலா மாதிரி பல் செட் (பிளாஸ்டிக்ல கடைல கிடைக்கும், 1 ரூபா ஒரு செட்) வாங்கி மாட்டிகிட்டு, கருப்புப் போர்வவயை போர்த்திகிட்டு தெருவுல இருக்குற பொடிசுகளையெல்லாம் பயமுறுத்துவோம். அப்புறமா எங்க பேரண்ட்ஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட் வரும்.
உங்க புள்ளையால எங்க புள்ளைக்கு ஜூரம் வந்துடுச்சுன்னு.

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி(எங்களுக்கு அப்போ பகல்தான்) நம்ம வலைப்பதிவர் தம்பியை சேட் பண்ண கூப்பிட்டப்போ ஆடிப் போயிட்டார் மனுஷன். பொறுமையா நாங்க உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்ணு சொல்லி புரிய வெச்சதுக்கப்புறம்தான் பேசவே ஆரம்பிச்சார்.

2. கிரிக்கெட்:

எத்தினி தடவை தோத்தாலும் இந்தியா ஜெயிக்கும்ணு உக்காந்து பார்க்குறது எங்களுக்கு தவிர்க்க முடியாத வியர்டா போயிடுச்சு. அட! பழைய மேட்ச் ரீப்ளே போட்டாக்கூட இதுலயாவது அந்த 20 ரன்னை சேர்த்து எடுத்து ஜெயிக்க மாட்டாங்களான்னு ஆவலா பார்த்துகிட்டிருபோம்.

எப்ப இதுல இருந்து மீளப் போறோம்னு தெரியலை!

3. தீனி
நொறுக்குத் தீனின்னா அப்படி இஷ்டம். எப்பவும் வாய்க்கு வேலை கொடுத்துகிட்டே இருப்போம். வயிற்றுக்கே சலிச்சிப் போயி(நொந்து போயி) ஜீரணிக்காம ஸ்டிரைக் பண்ணினாத்தான் கொஞ்சம் வாய்க்கு ஓய்வு கொடுப்போம்.

4. கவுஜ
கவுஜ எழுதுலறதுல (கவுஜ என்ற பேர்ல நாங்க எழுதுறது) கொஞ்சம் ஆர்வம் உண்டு. ஆனா இலக்கணம் இலக்கியமெல்லாம் தெரியாது. வார்த்தைங்களை பிச்சி பிச்சி போட்டு எழுதினா அதுதான் எங்களைப் பொறுத்தவரை கவுஜை!

5. காலணிகள்
எங்களுக்கு விதவிதமா ஷூ, செருப்பு எல்லாம் வாங்கிப் போடணும்னு ஆசைதான். ஆனா என்னங்க பண்ணுறது! ஆவிகளுக்குத்தான் கால் இல்லையெ! அதனால நாங்க ஃப்ரீபெய்டு சிம் கார்டு வாங்கலாம்னு இருக்கோம். அதுலயாவது இன்கம்மிங்க் கால் ஃப்ரீயா கிடைக்குமாமே!


ஆச்சு 5 வியர்டு குணங்கள். எத்தனையோ வியர்டு குனங்கள் இருந்தாலும் பதிவுலகைப் பொறுத்தவரை நாங்க ரொம்ப நல்லவங்கதான். சீரியஸா எழுதி யாரையும் பயமுறுத்தாம முடிஞ்சவரை நகைச்சுவையா எழுதறோம். என்னது? எந்தப் பதிவுல நகைச்சுவைன்னா கேக்குறீங்க. இப்போ ரீசண்டா போட்ட கிரிக்கெட் பதிவுகள் எல்லாம் வேற என்னவாம்?

இப்போ வேற யாரையாவது அழைக்கணுமாம்ல!
சரி நம்ம

இரவுக் கழுகார்,
இம்சை அரசன்,
சுப்பைய்யா வாத்தியார்,
தம்பி

ஆகிய 4 பேரை மட்டும் வியர்டு பதிவுகளை தொடருமாறு கேட்டுக் கொல்கிறோம்.

Monday, March 26, 2007

அப்பாடா!

அநியாயத்துக்கு பெர்முடாவும் ஒருவேளை ஜெயிக்கும், இந்தியா சூப்பர் 8 ல் நுழையும்னு நம்பிக்கை வெச்சிருந்த ரசிகக் கண்மணிகளா,

பங்களா தேஷ் அணியே இன்னிக்கும் ஜெயிச்சி, உங்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கைக்கும் முற்றுப் புள்ளி வெச்சிடுச்சு.

இனி ரன் ரேட் கணக்கெல்லாம் போட்டுகிட்டு இருக்காம, அவங்கவங்க பொழப்புக்குண்டான வழியைப் பார்ப்போம்!

Saturday, March 24, 2007

உலகக் கோப்பை....................!?

COME ON INDIA


"இனிமே கிரிக்கெட் பாப்பியா... கிரிக்கெட் பாப்பியா?

"ம்ஹும். எத்தினி தடவை பட்டாலும் உனக்கெல்லாம் புத்தி வராதே!"

Monday, March 19, 2007

மேகம் கருக்குது மழை வரப் பாக்குது!

மேகம் கருக்குது
மழை வரப் பாக்குது
வீசியடிக்குது காத்து!
மழைக் காத்து!

இன்னிக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெர்முடா அணிக்கெதிரா உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு அதிக பட்ச ஸ்கோர் (413/5) என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்திய அணியினரின் வங்க தேசத்துக்கெதிரான படுதோல்வியால் எழுந்த விமர்சனங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டாயிற்று. (தற்காலிகமாக). சும்மா சொல்லக் கூடாது. சேவாக், கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் ஆகியோர் பொறுப்புணர்ந்து ஆடி இருக்கிறார்கள். (அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழி நினைவுக்கு வருதே)

அதெல்லாம் சரி! இந்தியா உருப்படியா நல்லா விளையாடும்போது அப்படியே வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தா அடிவயிறு கலக்குது. அப்படியே மேலே இருக்குற பாட்டை உதடு தானாக பாடத் துடிக்குது. இந்தியாவின் வெற்றி இயற்கைக்கே பிடிப்பதில்லை என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். நம்ம ஆவி அம்மணி இங்கே கணிச்ச மாதிரி மழை வந்து கெடுத்திடுமோன்னு பயமா இருக்குதுங்க!

மழை தருமோ என் மேகங்கள்..... னு கூட ஒரு பாட்டு இருக்கு. அந்தப் பாட்டை இப்ப ஏனோ ரசிக்க முடியலை!

ஆவி அம்மணியின் கணிப்புகள் சில:

1. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.

2.சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!

3. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்

4. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.

4 வது கணிப்பு இன்னிக்குத் தேறாது. ஆனா ஒரு 25 ஓவர் விளையாடும் வரைக்கும் இயற்கை இன்னிக்கு இந்திய அணிக்கு கருணை காட்டுமா?

பொறுத்திருந்து பார்போம்!

Saturday, March 17, 2007

வாழ்வா சாவா போராட்டம் - தப்புமா இந்தியா?

சற்று நேரத்திற்கு முன்பு வரை 72/3 என்று ஆடிக்கொண்டிட்ருந்த அணி கேப்டன் டிராவிட்டும் எல்.பி.டபிள்யூ முறையில் சொற்ப ரன்களில்(14) வெளியேற கொஞ்சம் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

உலகக் கோப்பை 2007 போட்டிகளில் இந்திய அணியின் முதல் ஆட்டத்தில் இன்று பங்களாதேச அணியுடன் மோதுகிறது. சின்ன அணி என்று சொல்லப் படும் பங்களா தேச அணியுடனே இப்படி ஆடினால், மீதமிருக்கும் இலங்கை அணியுடனான போட்டியின் ரிசல்ட் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஆக இந்தப் போட்டி மற்றும் பெர்முடா அணியுடன் மோதும் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றால்தான் உண்டு என்ற நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய இந்திய அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டியாகத்ததன் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்தப் போட்டியில் 230 ரன்களை இந்திய அணி கடக்குமானால் வங்கதேச அணிக்குக் கொஞ்சம் கடுமையான இலக்கை கொடுக்கலாம்.

ஆவியுலக கணிப்புப் படி இந்திய அணியின் ஸ்கோர் 211. மே ஆர் மே நாட் பி ஆல் அவுட்.

மக்கள் திரும்பி வரச் சொல்லி அழைக்கிறார்கள் என்று இந்திய வீரர்கள் தவறாகப் புரிந்துகொள்வததத் தவிர்க்க தயவு செய்து யாரும் கமான் இண்டியா என்று உற்சாகக் குரல் கொடுக்காதீர்கள்.

Monday, February 19, 2007

22 : ஆவிகள் ஏற்றிய சுடர் - அல்வா!

எவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.

அத்துடன் ஆவியுலகின் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவை சுடர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு தேன்கூடு நிர்வாகத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.


பார்க்க :

சுடர் - கை மாறியதா - சர்வேசன்

சுடர் - தெளிவான விதிமுறைகள் - வெட்டிப் பயல்

நன்றி!